News March 28, 2024
மைசூர்-கடலூர் இடையே வந்தே பாரத் விரைவு ரயில்

மைசூா் – சென்னை விரைவு ரயில் கடலூா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தெரிவித்துள்ளார். தற்போது கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில் ரயில்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால் ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்களும் எந்த சிரமமும் இன்றி கோடையை கழிப்பர் , ரயில்வேக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 20, 2025
கடலூர்: வழிப்பறி கொள்ளையன் கைது

தூக்கணாம்பாக்கம் அடுத்த கலையூரை சேர்ந்தவர் அருள் மனைவி சித்ரா (49). நேற்று முன்தினம் அதே பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சித்ராவின் கழுத்தில் கிடந்த 5 கிராம் நகையை மர்மநபர் பறித்து சென்றார். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சித்ராவிடம் நகையை பறித்த விழுப்புரம் மாவட்டம் வி.அகரத்தை சேர்ந்த ஜெயக்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News November 20, 2025
கடலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் புயல் சின்னம் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.20) கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க!
News November 20, 2025
கடலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் புயல் சின்னம் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.20) கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க!


