News April 27, 2025

மே தினத்தையொட்டி மதுபான கடைகள் திறக்க தடை

image

மே 1ஆம் தேதி மே தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL2, FL3, FL3A, FL4A உரிமக் கடைகளில் மதுபானங்கள் மற்றும் பீர் விற்பனை மற்றும் எடுத்துச் செல்லுதல் தடை செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அறிவித்துள்ளார்.

Similar News

News November 20, 2025

கிருஷ்ணகிரி: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

image

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News November 20, 2025

கிருஷ்ணகிரி: உயிர் நண்பனை கொன்று தன் வீட்டிலேயே புதைத்த கொடூரன்

image

பர்கூர் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளியைச் சேர்ந்த துணி வியாபாரி சென்னகேசவன், நண்பர் கணேசனுடன் பிரியாணி சாப்பிட்டபோது ஏற்பட்ட தகராறில் அவரைக் கொலை செய்தார். பின்னர், கணேசனின் உடலைத் தன் வீட்டில் புதைத்துவிட்டு, துர்நாற்றம் வீசியதால் சாலையோரம் வீசிச் சென்றார். கந்திகப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சென்னகேசவனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News November 20, 2025

கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 3,058 காலியிடங்கள் அறிவிப்பு Apply Now!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் 3,058 NTPC காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 19,000 முதல் 21,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. மேலும் விருப்பமுள்ளவர்கள் நவம்பர்-27 குள் <>இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். ரயில்வே வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!