News March 4, 2025

மேல்மலையனூர் தேர் திருவிழா அவசர எண்கள் அறிவிப்பு

image

எஸ்.பி சரவணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேல்மலையனூர் தேர் திருவிழாவை முன்னிட்டு 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பக்தர்களுக்கு ஏதேனும் இடையூறுகள் இருப்பின் செஞ்சி உள்கோட்ட காவல் அலுவலகம்-9498100505, மேல்மலையனூர் காவல் நிலையம்- 9488100506, தனிப்பிரிவு அலுவலக எண் 9498100485, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை-9498181229 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 21, 2025

விழுப்புரம்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News December 21, 2025

விழுப்புரம்: பெண்ணை ஏமாற்றி லாரி கடத்தல்!

image

விழுப்புரம்: உப்பு வேலூரைச் சேர்ந்த மீனா (38) தனக்கு சொந்தமான லாரியை விற்க முயன்றுள்ளார். இதையறிந்த சேலத்தை சேர்ந்த முருகானந்தன் (44) என்பவர், மீனாவிடம் சென்று லாரியை விற்பனை செய்து தருகிறேன் எனக் கூறி எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் எந்த அவர் கூறியபடி பணத்தை தராத நிலையில், லாரியை கடத்திச் சென்றது மீனாவிற்கு தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 21, 2025

விழுப்புரம்: சேலையில் தீ பற்றி இளம்பெண் பலி!

image

விழுப்புரம்: கழிக்குப்பத்தைச் சேர்ந்த சுசீலா, தனது மகன் சுமன், மகள் அனுசுயா (26) வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சுசீலா மற்றும் சுமன் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அனுசுயா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வாசலில் வைத்திருந்த விளக்கில் இருந்து அனுசுயா சேலையில் தீ பற்றியதில் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!