News April 26, 2025
மேல்மலையனூருக்கு 65 சிறப்பு பஸ்கள் இயக்கம்

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசை ஊஞ்சல் சேவை நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலம் சார்பில் வேலூரில் இருந்து 35 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 15 பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து 15 பஸ்கள் என மொத்தம் 65 பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்படுகின்றன என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
Similar News
News November 13, 2025
வேலூர்: யோகா பயிற்சியாளர் தேர்வு -கலெக்டர் தகவல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வேலூர் மாவட்டத்தில் யோகா பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர்கள் தங்களுடைய பயோ டேட்டா மற்றும் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகலுடன் வரும் நவம்பர் 19-ம் தேதி மாலை 4 மணியளவில் காட்பாடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேரில் வந்து கலந்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
வேலூர்: பஸ் ஸ்டாண்டில் இறந்து கிடந்த முதியவர்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, ஒடுக்கத்தூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று (நவ.12) முதியோர் ஒருவர் இறந்து கிடப்பதாக வேப்பங்குப்பம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற அதிகாரிகள், உடலை மீட்டு, அந்த முதியவர் யார் என்ற விவரங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News November 13, 2025
வேலூர் ஆட்சியரின் உத்தரவு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 671 இடங்களில் 1,314 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 1,314 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், 135 மேற்பார்வை அலுவலர்களும் நியமிக்க பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கவனமாக பணியாற்ற வேண்டும் என கலெக்டர் இன்று (நவ.13) சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.


