News April 26, 2025
மேல்மலையனூருக்கு 65 சிறப்பு பஸ்கள் இயக்கம்

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசை ஊஞ்சல் சேவை நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலம் சார்பில் வேலூரில் இருந்து 35 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 15 பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து 15 பஸ்கள் என மொத்தம் 65 பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்படுகின்றன என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
Similar News
News November 25, 2025
காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு!

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவம்பர் 25) காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News November 25, 2025
வேலூர்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

வேலூர் மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க. 1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 25, 2025
வேலூர்: திருமணத் தடை நீங்க இந்த கோயிலுக்கு போங்க!

வேலூர், பள்ளி கொண்டா பகுதியில் உள்ளது பள்ளி கொண்ட பெருமாள் கோயில். பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்திலிருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் அவரை முதன்முதலாக சயனிக்க வைத்தார் என்கிறது தலபுராணம். இந்த தலத்தில் திருமணம் செய்தால் தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கையாக உள்ளது. திருமணம் தடைபட்டால் இந்த கோயிலுக்கு போய் வழிபட்டால் நல்லதே நடக்கும். ஷேர் பண்ணுங்க!


