News April 26, 2025

மேல்மலையனூருக்கு 65 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசை ஊஞ்சல் சேவை நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலம் சார்பில் வேலூரில் இருந்து 35 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 15 பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து 15 பஸ்கள் என மொத்தம் 65 பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்படுகின்றன என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Similar News

News November 23, 2025

வேலூர்: வாட்டர் வாஷ் செய்த சிறுவன் பலி

image

வேலூர் பலவன்சாத்து குப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கோகுல்பிரசாத் (17). இவர், ஓட்டேரி மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பிற்பகலில், கடையில் ஒரு வண்டிக்கு ‘வாட்டர் வாஷ்’ செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 23, 2025

வேலூர்: மத்திய சிறைக்குள் விழுந்த டிரோனால் பரபரப்பு!

image

வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறை அருகே மர்மநபர்கள் டிரோனை நேற்று பறக்க விட்டுள்ளனர். அப்போது திடீரென அந்த டிரோன் சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தின் கீழ் விழுந்தது. அங்கு பணியில் இருந்த சிறை காவலர்கள் டிரோனை சிறை அலுவலர் சிவபெருமாளிடம் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரோனை பறக்க விட்டவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

News November 23, 2025

குடியாத்தம்: கே.எம்.ஜி. கல்லூரியில் சிறப்பு கல்வி கடன் முகாம்

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் (நவ.25) அன்று நடைபெற இருக்கும் சிறப்பு கல்விக்கடன் முகாமினை கல்லூரி பயிலும் மாணவ- மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (நவ.22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!