News March 19, 2024
மேல்பாதி கோவிலை திறக்க இன்று உத்தரவு

விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு சென்ற ஆண்டு பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில், கோவிலை திறப்பது தொடர்பாக பாமக வழக்கறிஞர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், இன்று (மார்ச் 19) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வருகின்ற மார்ச் 22 வெள்ளிக்கிழமை முதல் தினமும் கோவிலை திறந்து இரண்டு வேளை பூஜை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 8, 2026
விழுப்புரம்: சீறி பாய்ந்த பைக் – கடைசியில் TWIST!

விழுப்புரம் மேற்கு போலீசார், நான்குமுனை சிக்னல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விழுப்புரம் தக்கா தெருவை சேர்ந்த ஷாருக், (22) மற்றும் அருளவாடியை சேர்ந்த ராஜி (25) ஆகியோர் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் பைக்குகளில் அதிவேகமாக ஓட்டி வந்தது தெரியவந்தது. விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து ஷாருக், ராஜியை கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
News January 8, 2026
விழுப்புரம்: இனி மலிவு விலையில் Sleeper டிக்கெட்!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., எப்போதும் பேருந்தில் அதிக விலை கொடுத்து டிக்கெட் புக் செய்கிறீர்களா? ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்து பயணம் செய்கிறீர்களா? கவலை வேண்டாம். உடனடியாக இங்கே<
News January 8, 2026
அறிவித்தார் விழுப்புரம் கலெக்டர் !

தமிழகத்தில் வரும் 9, 10, 11 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை, விவசாயிகள் அவசியம் கடைபிடித்திட வேண்டும் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை பெருமளவில் விவசாயிகள் தவிர்க்கலாம் என தெரிவித்துள்ளார்.


