News August 14, 2024
மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் பொறுப்பேற்பு

கோவையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவராக செந்தில்குமார் இன்று(14.8.24) பொறுப்பேற்று கொண்டார். மேற்கு மண்டல காவல்துறை தலைவராக பணியாற்றி வந்த பவானீஸ்வரி பணியிட மாறுதலில் சென்றார். இதையடுத்து புதிய மேற்கு மண்டல காவல்துறை தலைவராக செந்தில்குமார் இன்று பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து மேற்கு மண்டலத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Similar News
News October 29, 2025
சேலம்: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது https://www.sancharsaathi.gov.in/ என்ற இணையதளத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
சேலத்தில் மாமியார் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து!

சேலம் மின்னாம்பள்ளியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஞானஅரசன் (33). இவர் கடந்த 2023 ஆண்டு மே.23 அன்று பிரிந்து சென்ற மனைவியைத் திரும்ப அனுப்பக் கோரி, மாமியார் மற்றும் மனைவியின் இரண்டு சகோதரிகளை கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். இது தொடர்பான வழக்கில், ஞான அரசனுக்கு சேலம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 900 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
News October 29, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


