News April 14, 2025
மேற்குத்தொடர்ச்சி மலையில் நீர் அருந்தும் காட்டெருமை கூட்டம்

தற்போது கடுமையான வெயில் நிலவி வரும் நிலையில், பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் இருந்து காணி குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையிலுள்ள பனங்காட்டு ஓடை என்ற பகுதியில் குட்டிகளுடன் கூடிய சுமார் 15க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் நீர் அருந்தி ஓய்வெடுத்து சென்றன.
Similar News
News November 20, 2025
பாளையங்கோட்டையில் விசாரனை கைதி தற்கொலை

ஆய்க்குடியை சேர்ந்த திருமலை குமார் போக்சோ வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மது போதையில் பெற்ற மகளிடம் தவறாக நடந்து கொண்டதாக மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் கைதாகி திருமலை குமார் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
News November 19, 2025
நெல்லை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நெல்லை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 28ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் நெல்லை மாவட்ட விவசாயிகள் கலந்து கொள்ளலாம். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதில் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.
News November 19, 2025
பாளையங்கோட்டையில் கிரேன் மோதி பெண் உயிரிழப்பு

மகிழ்ச்சி நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி செல்வி வயது 54. இவர் இன்று காலை மகிழ்ச்சி நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கிரேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். கிரேனை ஓட்டி சென்றவர் ஹெட்போன் மாட்டிக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிந்து கிரேன் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.


