News August 27, 2024

மேம்பாலம் கட்டும் பணிகள்: கலெக்டர் ஆய்வு

image

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா மேம்பாலம் அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் நேற்று (ஆக.26) மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் கடலூர் மாநகராட்சி ஆணையாளர் எஸ்.அனு மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Similar News

News December 3, 2025

கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

image

புவனகிரியை அடுத்த சாத்தப்பாடி கிராமத்து சேர்ந்தவர் வேலு(23), இவர் 17 வயதுடைய சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அச்சிறுமி கர்ப்பமானாதல் துகுறித்து மேல் புவனகிரி ஊராட்சி ஊர் நல அலுவலர் அருளரசி கொடுத்த புகாரின் பேரில், சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் வாலிபர் மீது நேற்று போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 3, 2025

குறிஞ்சிப்பாடி: தீயில் கருகி பெண் உயிரிழப்பு

image

குறிஞ்சிப்பாடி அடுத்த சமட்டிக் குப்பத்தை சேர்ந்தவர் காசிராஜன் மனைவி வன்னிய மலர்(37). இவர் தனது வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த போது, நைட்டியில் தீப்பட்டு உடல் முழுவதும் பற்றி எரிந்தது. இதில் படுகாயம் அடைந்த வன்னியமலர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News December 3, 2025

கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!

error: Content is protected !!