News August 18, 2024

மேன்பாலம் அமைக்க ரூ.46 கோடி ஒதுக்கீடு

image

திண்டுக்கல் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடைபெறுகிற இடமாக மதுரை துவரிமான் – மேலக்கால் சந்திப்பு உள்ளது. துவரிமான் சந்திப்பில் உயர் மட்ட மேம்பாலமும், சுரங்கப்பாதையும் அமைக்க வேண்டுமென மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து மதுரை எம்.பி வெங்கடேசன் வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்று பாலம் அமைக்க ரூ. 46.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News November 4, 2025

மதுரை ரயில்வே ஊழியர் ஆற்றில் விழுந்து பலி

image

மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்த விஜயகுமார் வயது 38, ரயில்வேயில் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் நாகர்கோவில் சென்று விட்டு நேற்று முன்தினம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் போது, விருதுநகரில் உள்ள கவுசிகமா நதியில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து விருதுநகர் ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 4, 2025

மதுரை: கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!

image

கோவையில் தனியார் கல்லூரியில் முதுகலை படிக்கும் மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி படித்து வந்தார். காதலனுடன் காரில் இருந்தபோது அவ்வழியாக வந்த மூவர் காதலனை அரிவாளால் காயப்படுத்தி, மாணவியை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி 3 பேரை சுட்டுபிடித்தனர்.

News November 4, 2025

மதுரை: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

வாடிப்பட்டி ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணன் மகள் பாண்டீஸ்வரி 20. இவர் நிலக்கோட்டை அரசு கலை கல்லூரியில் சிஎஸ்ஐ 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

error: Content is protected !!