News March 5, 2025
மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில்

தென்னக ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் இன்று விடுத்த செய்திக்குறிப்பில், வரும் மார்.28 முதல் ஜூலை.6 ஆம் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வாரந்தோறும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், மார்.29 முதல் ஜூலை.7 வரை ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வாரந்தோறும் சனி, திங்கட்கிழமைகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News November 2, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (02.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
கோவையில் இலவச Python பயிற்சி!

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Data Analytics using Python பயிற்சி வழங்கப்படவுள்ளது. 18 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Python பயிற்சி அளிக்கப்படுவதோடு, அதில் உள்ள நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News November 2, 2025
சிறப்பு ரயில் அறிவிப்பு

பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, கோவை–மடார் (ராஜஸ்தான்) இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. கோவை–மடார் (06181) ரயில் (நவ.13 முதல் டிச.4) வரை வியாழன் அதிகாலை புறப்படும்; மடார்–கோவை (06182) ரயில் (நவ.16 முதல் டிச.7) வரை ஞாயிறு இரவு புறப்படும். மேலும் இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.


