News August 14, 2024
மேடவாக்கத்தில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு

அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (27), பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் ஆகும். இவர், நேற்றிரவு 11 மணி அளவில் மேடவாக்கம் கூட்ரோடு அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத 4 பேர் அவரை வழிமறித்து ராஜசேகரை சராமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். தகவல் அறிந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜசேகரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
Similar News
News November 30, 2025
‘டிட்வா’புயல் செங்கல்பட்டுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

‘டிட்வா’புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.செங்கல்பட்டில் 10கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பாகத் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர அவசரகால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் அவசர உதவிக்கு 1077, 044-27427412, 044-27427414 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
News November 30, 2025
‘டிட்வா’புயல் செங்கல்பட்டுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

‘டிட்வா’புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.செங்கல்பட்டில் 10கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பாகத் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர அவசரகால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் அவசர உதவிக்கு 1077, 044-27427412, 044-27427414 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
News November 30, 2025
‘டிட்வா’ புயலால் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ORANGE ALERT!

வட கடலோரப் பகுதியை நோக்கி நகரும்’டிட்வா’ புயலால் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அண்டை மாவட்டங்களான சென்னை மற்றும் காஞ்சிபுரத்திற்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வர வேண்டாம். மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


