News August 25, 2024
மெட்ரோ ரயில் பணியால் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணி காரணமாக மவுண்ட் பூந்தமல்லி ரோடு புகாரி ஹோட்டல் முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை இன்றுமுதல் 27ஆம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.அதன்படி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து போரூர் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கலாம். போரூரில் இருந்து கத்திப்பாரா நோக்கி வரும் வாகனங்களுக்கு மாற்றுபாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News October 17, 2025
சட்டமன்றத்திற்கு அல்வா கொண்டு வந்த உறுப்பினர்கள்

கடந்த சில நாட்களாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில், இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் ஆளுங்கட்சி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த வந்தார். அந்த வகையில் இன்று மின்சார கட்டணம் குறித்து, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் வகையில் , திமுக உருட்டு கடை அல்வா, மாதாந்திர மின் கட்டணம் என்ற வசனங்களோடு அதிமுக MLA அல்வா கொண்டு வந்தனர்.
News October 17, 2025
சென்னை: இனி What’s App-லயே எல்லாம்! SUPER NEWS

சென்னை வாசிகளே அரசு சேவைகளை பெற சென்னை மாநகராட்சி சூப்பர் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சொத்து வரி, தொழில் வரி, இருப்பிட சான்று, பிறப்பு சான்று, இறப்பு சான்று, குடிநீர் இணைப்பு, நீச்சல் குளம் முன்பதிவு, செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவு போன்ற 35 சேவைகளை What’s Appலயே பெறலாம். இதற்கு ‘9445061913’ என்ற எண்ணுக்கு ‘Hi” னு SMS பண்ணுங்க. பின் மாநகராட்சியின் சேவைகளை அதில் பெற்றுக்கொள்ளலாம். (SHARE)
News October 17, 2025
சென்னை: துணை ஜனாதிபதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக எஸ்டேட் போலீசாருக்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டதில், மிரட்டல் புரளி என உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர் ஒரு வருடமாக போயஸ் கார்டனில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் தங்கி வருகிறார்.