News August 25, 2024

மெட்ரோ ரயில் பணியால் போக்குவரத்து மாற்றம்

image

மெட்ரோ ரயில் பணி காரணமாக மவுண்ட் பூந்தமல்லி ரோடு புகாரி ஹோட்டல் முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை இன்றுமுதல் 27ஆம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.அதன்படி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து போரூர் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கலாம். போரூரில் இருந்து கத்திப்பாரா நோக்கி வரும் வாகனங்களுக்கு மாற்றுபாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News November 25, 2025

சென்னையில் இனி டிராஃபிக் இல்லை!

image

சென்னையில் பேருந்துகள் மட்டும் செல்ல தனி வழித்தடம் அமைப்பதற்காக நிலம் அடையாளம் காணும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை ஆரம்பித்துள்ளது. அதன்படி, பிராட்வே-பூந்தமல்லி ஈ.வே.ரா சாலை, நீலாங்கரை-பல்லாவரம் சாலை, வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை ஆகிய 3 சாலைகளில் தனி வழித்தடம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னையில் டிராஃபிக் ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 25, 2025

சென்னை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

image

சென்னை மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு<> க்ளிக்<<>> செய்யுங்க. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News November 25, 2025

சென்னை: கணவனை கொன்று தூக்கில் மாட்டிய மனைவி

image

சென்னை கொடுங்கையூரில், கணவன் மணிகண்டனை நேற்று இரவு நைலான் கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவி சரண்யாவை காவல்துறையினர் கைது செய்தனர். கணவனை கொன்ற பிறகு தூக்கில் தொங்க விட்டுவிட்டு தற்கொலை செய்ததாக நாடகம் ஆடியதும், விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் எதற்காக கணவனை கொன்றார் கள்ளத்தொடர்பு ஏதும் இவருக்கு இருக்கிறதா? என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!