News August 25, 2024
மெட்ரோ ரயில் பணியால் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணி காரணமாக மவுண்ட் பூந்தமல்லி ரோடு புகாரி ஹோட்டல் முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை இன்றுமுதல் 27ஆம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.அதன்படி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து போரூர் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கலாம். போரூரில் இருந்து கத்திப்பாரா நோக்கி வரும் வாகனங்களுக்கு மாற்றுபாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 9, 2025
சென்னை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

சென்னை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).
News November 9, 2025
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு GOOD NEWS!

சென்னை மெட்ரோ பயணிகளின் வசதிக்காக ‘வீட்டு வாசலில் மெட்ரோ’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 11 நிலையங்களை இணைத்து, 220 புதிய மின்சார மைக்ரோ பேருந்துகள் 5 நிமிடத்திற்கு ஒருமுறை இயக்கப்படும். ‘சென்னை ஒன்’ செயலி மூலம் பேருந்தைக் கண்காணிக்கலாம், டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 9, 2025
வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி; சென்னையில் முகாம்

வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசி, சிப் பொருத்துவதை சென்னை மாநகராட்சி கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று (நவ.09) பல்வேறு பகுதிகளில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வரும் 16, 23ம் தேதிகளில் முகாம் நடைபெறும் நிலையில், தடுப்பூசி செலுத்தாத நாய் உரிமையாளர்களுக்கு வரும் 24ம் தேதி முதல் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.


