News April 6, 2025
மெட்ரோ போக்குவரத்தை அதிகரிக்க கோரிக்கை

நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் திரையரங்குக்கு செல்ல குடும்பத்துடன் அதிகம் பேர் பயணம் செய்கின்றனர். மெட்ரோவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான போக்குவரத்து கிடையாது. இதனால் கூட்ட நெரிசலின்றி பயணம் செய்ய பயணிகள், ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக மெட்ரோவை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 24, 2025
சென்னை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News November 24, 2025
சென்னை- ஹதாராபாத் இடையிலான 780 கி. மீ புல்லட் ரயில்!

சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் இடையிலான 780 கி.மீ புல்லட் ரயில் பாதைக்கான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மத்திய தெற்கு ரயில்வே சமர்ப்பித்தது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் 12 மணி நேரத்திலிருந்து தோராயமாக 2.5 மணி நேரமாகக் குறையும்.
News November 24, 2025
சென்னை: விரல் நுனியில் ரேஷன் விவரங்கள்!

தமிழ்நாடு குடும்ப அட்டைதாரர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செயலி தான் TNePDS மொபைல் செயலி. இதன் மூலம் உங்களுடைய ரேஷன் கடையில் என்ன பொருட்கள் உள்ளன என்ற இருப்பு விவரத்தை அறிந்து கொள்ளலாம். அதே சமயம், தங்களின் ரசீதுகளையும் சரிபார்த்துக் கொள்ளலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள இந்த செயலியை <


