News August 14, 2024
மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை மாநகராட்சி அலுவலகம்

இந்திய திருநாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், என பல்வேறு இடங்களில் தேசிய மூவர்ண கொடி மூலம் அலங்கரிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகம் முழுவதும் மூவர்ண விளக்குகளால் கண்கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
சென்னை பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் நள்ளிரவில் வலுவிழந்தது. இந்நிலையில் வலுவிழந்த டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னைக்கு 90 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது மதியம் வக்கீல் மேலும் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி செல்லும் குழைந்தைகள் குடை, ரெயின் கோர்ட் கொண்டு செல்லுங்கள்.
News December 1, 2025
சென்னை: கார், பைக் வைத்திருப்போருக்கு HAPPY NEWS!

சென்னை தனிநபர் பயன் பாட்டிற்கான புதிய கார்கள், இருசக்கர வாகனம் ஆர்.டி.ஒ அலுவலத்திற்கு நேரில் கொண்டு வந்து ஆய்வு செய்ய தேவையில்லை என்ற நடைமுறை இன்று டிச 1 முதல் அமல் ஆக உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட டீலர்களே ஆவணங்களின் அடிப்படையில் பதிவு நடைமுறைகளை முழுமையாக முடித்துவிடலாம். இருப்பினும், வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களை பதிவு செய்ய, ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு கொண்டுசென்று கட்டாய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்
News December 1, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் நேற்று (30.11.2025) இரவு 11.00 மணி முதல் இன்று (டிச.01) காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.


