News August 14, 2024

மூவண்ணக் கொடியில் மிளிரும் நாகூர் தர்கா மினாரா

image

நாட்டின் 78ஆவது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் பெரிய மினாரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. நாகூர் தர்கா நிர்வாகத்தின் சார்பாக தர்காவின் பெரிய மினாராவில் மூவர்ண நிறத்தில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, ஜொலித்து காணப்படுவதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர்.

Similar News

News October 13, 2025

கூட்டுறவு சங்க பட்டாசு விற்பனையை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

நாகை, வெளிப்பாளையம் பப்ளிக் ஆபிஸ் சாலையில், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் குறைந்த விலை பட்டாசு விற்பனை கடையினை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று மாலை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் பாத்திமா சுல்தானா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News October 13, 2025

நாகை: மக்கள் குறைதீர் கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 189 மனுக்களை பெற்ற அவர், அவற்றுக்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

News October 13, 2025

நாகை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நாகை மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<> electoralsearch.eci.gov<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதை தடுக்கலாம். SHARE!

error: Content is protected !!