News January 25, 2025
மூத்த குடிமக்களுக்கு உபகரணம் வழங்கும் தேதி அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசின் Rastriya Vayosri Yojana (ராஸ்டிரிய வயோஸ்ரீ யோஜனா) திட்டத்தின்கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முத்த குடிமக்களுக்கு மடக்கும் விதமான சக்கர நாற்காலி சிறப்பு நடைபயிற்சி உபகரணம் வழங்கும் விழா தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பத்தூரில் 28ஆம் தேதி, நாட்றம்பள்ளியில் 29ஆம் தேதி, வாணியம்பாடியில் 30ஆம் தேதி, ஆம்பூரில் 31ஆம் தேதி வழங்கப்படும்.
Similar News
News November 15, 2025
திருப்பத்தூர்: சம்பளம் வரலையா..? உடனே CALL!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 15, 2025
ஆம்பூர்: வீட்டுக்குள் நுழைந்த பாம்பிற்கு வழிபாடு!

ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள்(67). வீட்டில் தனியாக வசித்து வரும் இவரின் வீட்டில் மூன்று நாட்களுக்கு முன்பு ஓர் நல்ல பாம்பு புகுந்தது. அதை விரட்ட முனியம்மாள் முயற்சித்தும் முடியாததால் வீட்டிலேயே முடங்கி வாழ்ந்துள்ளார். நேற்று(நவ.15) அக்கம் பக்கத்தினரிடம் அவ தகவல் தெரிவிக்க, தீயணைப்பு வீரர்கள் பாம்பை மீட்டனர். அப்போது, முனியம்மாள் கற்பூரம் ஏற்றி வணங்கி வழியனுப்பினார்.
News November 15, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (நவ.14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.


