News March 28, 2025

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: ஒடிசா இளைஞர் கைது

image

கோவில்பாளையத்தில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஒடிசா இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவில்பாளையம் அண்ணா நகர் பகுதியில், பொன்னுத்தாய்(65) என்ற மூதாட்டிக்கு, அதே பகுதியில் கட்டட வேலை செய்து வந்த, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமீர் மாலிக்(23) என்பவர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை கோவில்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News November 6, 2025

துடியலூர்: அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

image

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் சுமார் 60 முதல் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள், துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 6, 2025

இடையர்பாளையம் அன்னாபிஷேகம் அலங்காரம்

image

கோவை மாவட்டம் இடையர்பாளையம் அடுத்த லட்சுமி நகர் பகுதியில், ஸ்ரீ அருள்மிகு லட்சுமி விநாயகர் கோவில் உள்ளது. கோவிலில் நேற்று அன்னாபிஷேகம் முன்னிட்டு சிவனுக்கு மற்றும் அம்மனுக்கும் அன்னாபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். இதில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

News November 5, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (05.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!