News May 7, 2025
மூடாத போர்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

இந்திய உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறுகளில் சிறு குழந்தைகள் விழுவதால் ஏற்படும் அபாயகரமான விபத்துகளை தடுப்பதற்காக கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை களிமண், மணலால் மூட வேண்டும். மூடாத போர்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று புதுகை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
புதுகை: B.E போதும் வங்கி வேலை ரெடி!

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 17, 2025
புதுகை: பட்டாக்கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது!

ஆலங்குடியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவில் அருகே வாலிபர் ஒருவர் பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பட்டாக்கத்தியுடன் திரிந்த வடக்குப்பட்டி இளைஞர் என்பவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்
News November 17, 2025
புதுகை: மழையா? இதை மறக்காதீங்க!

புதுகை மக்களே, தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கி தரப்படும்! SHARE


