News April 19, 2025

முழு வீச்சில் தயாராகும் பொருட்காட்சி திடல்

image

சிவகாசி சித்திரை திருவிழாவை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி முதல் ஒரு மாதம் பிரம்மாண்ட பொருட்காட்சி நடைபெற உள்ளது. விளாம்பட்டி சாலையில் நடைபெற உள்ள பொருட்காட்சிக்கான முன்னேற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொருட்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க அதிநவீன பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற உள்ளன. தற்போது பொருட்காட்சி திடல் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

Similar News

News December 9, 2025

விருதுநகர்: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

image

விருதுநகர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 9, 2025

விருதுநகர்: இளைஞருக்கு ஆயுள் தண்டனை 

image

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் வடகாசி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரும், அதே பகுதியை சேர்ந்த மாடசாமியும் லோடுமேன் வேலை செய்து வந்தனர். இருவரும் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த 2020-ம் ஆண்டு மாடசாமி இசக்கிமுத்துவை அருவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில் குற்றவாளி மாடசாமிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News December 9, 2025

விருதுநகர் அருகே கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

image

வத்திராயிருப்பு அருகே சேது நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராம்குமார். இவர் நண்பருடன் சேர்ந்து மது குடித்துவிட்டு தனியார் தோப்பில் உள்ள கிணற்றுக்குள் குதித்து குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!