News April 19, 2025
முழு வீச்சில் தயாராகும் பொருட்காட்சி திடல்

சிவகாசி சித்திரை திருவிழாவை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி முதல் ஒரு மாதம் பிரம்மாண்ட பொருட்காட்சி நடைபெற உள்ளது. விளாம்பட்டி சாலையில் நடைபெற உள்ள பொருட்காட்சிக்கான முன்னேற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொருட்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க அதிநவீன பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற உள்ளன. தற்போது பொருட்காட்சி திடல் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
Similar News
News November 19, 2025
விருதுநகர்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

விருதுநகர் மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 19, 2025
விருதுநகர்: 6 நிமிடத்தில் ரூ.10 லட்சத்தை இழந்த பாஜக நிர்வாகி

பாண்டியன் நகரை சேர்ந்தவர் பாஜக மாவட்ட துணை தலைவர் ராமதாஸ். இவரது போனிற்கு வந்த பி.எம் கிசான் லிங்கை ஓபன் செய்த போது அடுத்த 6 நிமிடத்திற்குள் ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சம் எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து விருதுநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்த நிலையில் பணத்தை எடுத்த நபரின் வங்கியில் இருந்து ரூ.3 லட்சத்தை எடுக்க முடியாதபடி லாக் செய்து கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
News November 19, 2025
விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நவ.21 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் அளிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.


