News April 19, 2025

முழு வீச்சில் தயாராகும் பொருட்காட்சி திடல்

image

சிவகாசி சித்திரை திருவிழாவை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி முதல் ஒரு மாதம் பிரம்மாண்ட பொருட்காட்சி நடைபெற உள்ளது. விளாம்பட்டி சாலையில் நடைபெற உள்ள பொருட்காட்சிக்கான முன்னேற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொருட்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க அதிநவீன பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற உள்ளன. தற்போது பொருட்காட்சி திடல் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

Similar News

News November 28, 2025

விருதுநகர்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

விருதுநகர் மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)

News November 28, 2025

விருதுநகர்: ரூ.30.55 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

image

விருதுநகர் ரயில்வே நிலையத்தில் அமிர்த பாரத் திட்டத்தில் ரூ.30.55 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. தோரண நுழைவாயில் சுற்றுச்சுவர் கூரையுடன் கூடிய டூவிலர் கார்கள் காப்பகம், முகப்பு மேம்பாடு, மின் தூக்கி வசதியுடன் நடை மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.எம் சிங் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

News November 28, 2025

விருதுநகர்: லாரி மீது மோதிய கார் விபத்தில் இளைஞர் படுகாயம்

image

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை‌ சேர்ந்தவர் நித்திஷ்(21). இவர் நேற்று நவ.27 காரில் அருப்புக்கோட்டை சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிய போது ராமசாமிபுரம் விலக்கில் கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி தூத்துக்குடியில் இருந்து மதுரையில் இருந்து தூத்துக்குடி சென்ற லாரியின் மீது மோதி நித்திஷ் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!