News October 23, 2024

முழு கொள்ளளவை எட்டாததால் நீர் இருப்பு குறைவு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் 381 ஏரிகள் உள்ளன. இதில், ஒரு ஏரி கூட முழு கொள்ளளவை எட்டாத நிலையில் உள்ளது. மொத்த ஏரிகளில் 11 ஏரிகள் 75 சதவீதமும், 93 ஏரிகள் 50 சதவீதமும், 275 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவான நீர் இருப்பை கொண்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழைக்காலம் தொடங்கியுள்ளதால், நீர் இருப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Similar News

News September 16, 2025

துணை முதல்வரிடம் காஞ்சி விவசாயிகள் மனு

image

காஞ்சி விவசாயிகளின் நீர் பாசனத்துக்கு பயன்படும் பிவிசி பைப்புகள், பயோ சார் கோல் பிளான்ட் விவசாய கழிவுகள், பயோ கேஸ் அமைப்புகளை 50% மானியத்திலும் , காஞ்சியில் விவசாயக் கல்லூரி, கே வி கே அமைக்கவும், கரும்புக்கு கூட்டுறவு துறை போன்று தனியார் துறையிலும் ரூ 4000 வழங்க கோரி துணை முதல்வரிடம் மாநில விவசாய சங்க தலைவர் கே எழில் இன்று மனு அளித்தார்.

News September 16, 2025

காஞ்சிபுரம்:MCA,M.Sc,BE/ B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பல்வேறு பிரிவுகளில் மேனேஜர் மற்றும் சீனியர் மேனேஜர் பதவிக்கு 127 காலிப்பணியிடங்கள் உள்ளது. சம்பளமாக ரூ.1,05,280 வரை வழங்கப்படும். மேனேஜர்(25-35 வயது) 2-3 ஆண்டுகள் அனுபவம் தேவை. சீனியர் மேனேஜர்(30-40 வயது) 3-5 ஆண்டுகள் அனுபவம் தேவை. MCA,M.Sc(CS), BE/ B.Tech(CIVIL,MECH,ECE,EEE) படித்தவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் அக்.3 வரை விண்ணபிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News September 16, 2025

காஞ்சிபுரம்: சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

image

காஞ்சிபுரம் மக்களே!மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் யுகத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200 மற்றும் TOLL FREE NO-1930 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள்

error: Content is protected !!