News October 23, 2024

முழு கொள்ளளவை எட்டாததால் நீர் இருப்பு குறைவு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் 381 ஏரிகள் உள்ளன. இதில், ஒரு ஏரி கூட முழு கொள்ளளவை எட்டாத நிலையில் உள்ளது. மொத்த ஏரிகளில் 11 ஏரிகள் 75 சதவீதமும், 93 ஏரிகள் 50 சதவீதமும், 275 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவான நீர் இருப்பை கொண்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழைக்காலம் தொடங்கியுள்ளதால், நீர் இருப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Similar News

News December 8, 2025

காஞ்சி: பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் டிச.13 ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் சிங்காடிவாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் மானாம்பதி, வாலாஜாபாத் வட்டத்தில் ஊத்துக்காடு, திருப்பெரும்புதூர் வட்டத்தில் காட்ராம்பாக்கம், குன்றத்தூர் வட்டத்தில் வளையகரணை ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News December 8, 2025

காஞ்சிபுரம்: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

image

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து, வரும் டிச.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு ரூ.35,400 சம்பளமாக வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 8, 2025

காஞ்சிபுரம்: வாடகை வீட்டுக்கு போறீங்களா?

image

வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!