News August 9, 2024
முள்ளங்குடி ஊராட்சி தலைவருக்கு தேசிய விருது

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் முள்ளங்குடி ஊராட்சிக்கு, ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் சுகாதார பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருது மந்திரி எஸ்.பி. சிங் பாகல் வழங்கினார்.
Similar News
News December 17, 2025
தஞ்சை: கொலைவழக்கில் மேலும் 2 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம், மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டித்ததால் 2019ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், வழக்கில் தொடர்புடைய முகமது அலி ஜின்னா மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த அஸ்மத் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
News December 17, 2025
தஞ்சை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் (டிச.19) அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில், தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
News December 17, 2025
தஞ்சை: கரண்ட் இல்லையா? கவலை வேண்டாம்!

தஞ்சை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் இரவு நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 15 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


