News August 9, 2024

முள்ளங்குடி ஊராட்சி தலைவருக்கு தேசிய விருது

image

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் முள்ளங்குடி ஊராட்சிக்கு, ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் சுகாதார பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருது மந்திரி எஸ்.பி. சிங் பாகல் வழங்கினார்.

Similar News

News September 17, 2025

தஞ்சை மக்களே இதை Note பண்ணுங்க!

image

நமது தஞ்சை மாவட்டத்தில் இன்று 17.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம்
⏩கும்பகோணம்
✅பவளம் திருமண மண்டபம், பக்தபுரி தெரு,
⏩அதிராம்பட்டினம்
✅பள்ளிவாசல் மண்டபம், தரகர் தெரு,
⏩தஞ்சாவூர்
✅கவின் திருமண மண்டபம், மருங்குளம்
⏩பேராவூரணி
✅சமுதாயக்கூடம் புனவாசல் வாடிக்காடு
⏩அம்மாபேட்டை புலவர்நத்தம்
✅ஸ்ரீ விஷ்ணு மஹால் ஆலங்குடி
⏩கும்பகோணம்
✅நூர் மஹால், பாபுராஜபுரம்
SHARE பண்ணுங்க!

News September 17, 2025

கும்பகோணம்: கார் மோதி விவசாயி பலி

image

கும்பகோணம் அருகே கீழக்கொட்டையூர் மேலத்தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், ஏராகரம் அருகே புளியஞ்சேரி பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சுவாமிமலை காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் ரகுராமை காவல்துறையினர் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.

News September 17, 2025

நீரில்மூழ்கி இளைஞர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

image

பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம், காந்திநகரை சேர்ந்தவர் ஜெயகாந்தன்(24). இவர் தனது தாத்தா சுந்தர்ராஜ் உடன் கருங்குளம் நசுவினி ஆற்றில் குளித்துள்ளார். அப்போது ஜெயகாந்தன் ஆற்றின் ஆழத்தில் சிக்கிக் மூச்சு திணறல் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!