News August 14, 2024

முருங்கை பிசின் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை

image

தேனி விவசாயிகள் முருங்கை காய்களில் ஏற்படும் பிசின் நோயை தடுக்க முருங்கை சாகுபடி செய்த பகுதியில் 1 ஏக்கருக்கு 7 இனக்கவர்ச்சி பொறிகள் வைக்க வேண்டும். சிட்ரோனெல்லா எண்ணெய், யூகலிப்படஸ் எண்ணெய், வினிகர் பயன்படுத்தலாம். காய்கள் 50% காய்த்த நிலையில் நிம்பிசைடின் 1 லிட்டருக்கு 3மி.லி. வீதம் கலந்து தெளிக்கலாம். 35 நாட்கள் இடைவெளிக்குப்பின் 2வது முறை தெளிக்க வேண்டும் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News July 11, 2025

ரேஷன் கார்டில் பிரச்சனையா..இந்த வாய்ப்பை பயன்படுத்துங்க

image

தேனி மாவட்டத்தில் ஜூலை.12 ஆண்டிபட்டி கோரையூத்து சமுதாயகூடம், பெரியகுளம் சருத்துப்பட்டி, தேனி காட்டுநாயக்கன்பட்டி, போடி பெருமாள் கவுண்டன்பட்டி, உத்தமபாளையம் டி.பொம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளில் நுகர்வோர் குறைதீர் முகாம் நடைபெறும். இதில், ரேஷன் கார்டில் பெயர், முகவரி, போன் நம்பர், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். மிஸ் பண்ணிடாதீங்க SHARE பண்ணுங்க.

News July 11, 2025

தேனியில் வரதட்சனை கொடுமை பெண் உயிரிழப்பு

image

தேனி , அரண்மனைபுதூர் கிழக்கு தெருவை சேர்ந்த பெரியகருப்பன் என்பவரது மகள் முத்துமணி. இவர் திருமணம் முடிந்து கணவர் வீட்டார் வரதட்சனை கேட்டு தொல்லை செய்ததால், அவரது தந்தை வீட்டில் குடியிருந்து வரும் நிலையில் மன உளைச்சலில் இருந்த முத்துமணி அரளி விதை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறப்பு சம்மந்தமாக தந்தை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை.

News July 11, 2025

தேனி ஆட்சியர் அலுவலகம் முன் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

image

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் தேனி கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பதவிகளை சரண்டர் செய்யாதே, துணை சுகாதார நிலையம் பராமரிப்புக்கான நிதியை முறையாக வழங்கிடு, காலி பணியிடங்களை நிரப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முழங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாவட்ட தலைவர் வசந்தா பொருளாளர் எலியட், லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!