News August 14, 2024

முருங்கை பிசின் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை

image

தேனி விவசாயிகள் முருங்கை காய்களில் ஏற்படும் பிசின் நோயை தடுக்க முருங்கை சாகுபடி செய்த பகுதியில் 1 ஏக்கருக்கு 7 இனக்கவர்ச்சி பொறிகள் வைக்க வேண்டும். சிட்ரோனெல்லா எண்ணெய், யூகலிப்படஸ் எண்ணெய், வினிகர் பயன்படுத்தலாம். காய்கள் 50% காய்த்த நிலையில் நிம்பிசைடின் 1 லிட்டருக்கு 3மி.லி. வீதம் கலந்து தெளிக்கலாம். 35 நாட்கள் இடைவெளிக்குப்பின் 2வது முறை தெளிக்க வேண்டும் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News December 3, 2025

தாமதமின்றி SIR படிவங்களை சமர்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

image

தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளைக்குள் SIR படிவம் சமர்ப்பிக்க வேண்டும் என்று இருந்த நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் டிச.11 வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. இதனையடுத்து கடைசி நாள் வரை காத்திருக்காமல் படிவங்களை பூர்த்தி செய்து BLOகளிடம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News December 3, 2025

தேனி: முன்விரோதத்தால் அரிவாள் வெட்டு; மூவர் கைது!

image

தேவதானப்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக நேற்று (டிச.2) அன்பழகனின் மகன் சத்தியநாதன் அன்பழகனின் பேரன் ஆகியோர் பாண்டியிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தேவதானப்பட்டி போலீசார் அன்பழகன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

News December 3, 2025

தேனி: சண்டையை தடுத்தவருக்கு அரிவாள் வெட்டு!

image

பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த செல்வம், சாம் ஆகியோர் சண்டையிட்டுக் கொண்டிருந்துள்ளனர். சண்டையை முத்துச்சாமி விலக்கி விட்ட நிலையில் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து அரிவாளால் முத்துசாமியை தாக்கி உள்ளனர். இது குறித்த புகாரில் போலீசார் தாக்கிய இருவர் மீதும் வழக்கு (டிச.2) பதிவு.

error: Content is protected !!