News August 24, 2024

முருகன் மாநாடு குத்துவிளக்கு ஏற்றிய அமைச்சர்!

image

திண்டுக்கல், பழனியில் இன்று நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு நிகழ்ச்சியைக் காண பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என மாவட்ட ஆட்சியர் வைத்துள்ளார். இந்நிலையில் பழனியில் இன்று நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

Similar News

News November 19, 2025

திண்டுக்கல் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

image

திண்டுக்கல் அருகே உள்ள பித்தளைப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 29). கூலித்தொழிலாளி. இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கார்த்திக்கை கைது செய்தனர்.

News November 19, 2025

நத்தத்தில் கணவன் கண் முன்னே மனைவி பலி!

image

நத்தம்- கோலில்பட்டியை சேர்ந்தவர் ஆதிமூலம்(55). இவர் தனது மனைவி தமிழ்ச்செல்வியுடன் நேற்று முன்தினம் இரவு பைக்கில் கோபால்பட்டி சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.நத்தம் தாலுகா அலுவலகம் அருகே வந்த போது கட்டுபாட்டை இழந்த பைக் சாலையில் நடந்து சென்றவர் மீது மோதி கவிழ்ந்தது.இதில் 3 பேரும் காயமடைந்த சிகிச்சை பெற்ற நிலையில் தமிழ்ச்செல்வி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News November 18, 2025

திண்டுக்கல்லில் வேலைவாய்ப்பு: கலெக்டர் அறிவிப்பு!

image

திண்டுக்கல் மக்களே, வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் https://tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு 94990 55924 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE IT!

error: Content is protected !!