News February 16, 2025

முரம்பு மண் கடத்தியவர் கைது லாரி பறிமுதல்

image

சோளிங்கர் சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கருமாரியம்மன் கோயில் அருகில் இன்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி மடக்கி சோதனை இட்டதில், அரசு அனுமதி இன்றி முரம்பு மண் கடத்திச் செல்வது தெரிந்தது. போலீசார் லாரியை பறிமுதல் செய்து, சாணமல்லூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர்.

Similar News

News December 4, 2025

ராணிப்பேட்டையில் SIR பணிகள் ஆலோசனை!

image

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 283 பாகங்களில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்று (டிச.03) புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் கு.ராஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தேச பட்டியல் வழங்கப்பட்டது. பின் குறைபாடுகள் இருப்பின் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

News December 4, 2025

ராணிப்பேட்டையில் நாய் கடித்து பலி!

image

ராணிப்பேட்டை மாவட்டம், மகேந்திரவாடி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் தனது கொட்டகையில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் இன்று (டிச.04) கலைச்செல்விக்கு சொந்தமான ஒரு பெரிய ஆடு, 6 சிறிய ஆட்டுக்குட்டிகள் என 7 ஆடுகளை நாய் கடித்து இறந்தது தெரிய வந்தது. பின், நெமிலி வட்டாட்சியர் மற்றும் பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.

News December 4, 2025

ராணிப்பேட்டை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!