News March 25, 2025
மும்பை-குமரி இடையே சிறப்பு ரயில் சேவை

மும்பை-குமரி இடையே புதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. முதல் முறையாக, இந்த ரயில் கரூர், திருச்சி வழியாக இயக்கப்படுகிறது.
வஎ. 01005/01006 ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 25 வரை புதன் கிழமைகளில் இயக்கப்படுகிறது.
மும்பையிலிருந்து
செவ்வாய் இரவு 12:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறு மார்க்கத்தில் குமரியிலிருந்து
வியாழன் மாலை 4:45 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ரயில் பயணிகளுக்கு பகிரவும்
Similar News
News November 26, 2025
குமரி: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பழவிளையை சேர்ந்தவர் சமுத்திரபாண்டியன். இவரது மகன் அபிஷாந்த் (27), உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த இவர், வீட்டின் அருகில் உள்ள தோப்பில் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 26, 2025
குமரி: மீனவர்கள் கவனத்திற்கு.. கலெக்டர் அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் மீனவர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். அதற்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். SHARE
News November 25, 2025
குமரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

குமரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


