News August 7, 2024
முன்பதிவு இல்லா பயண சீட்டு விற்பனை அதிகரிப்பு

மொபைல் போன் முன்பதிவு இல்லா பயண சீட்டுகள் விற்பனை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாதத்திற்கு சுமார் 26,978 பயணிகள் மொபைல் போன் பயணிச்சீட்டுகள் மூலம் பயணம் செய்த நிலையில் அது கடந்த ஜூலையில் 68,631 ஆக உயர்ந்துள்ளது. இச்சாதனையை எட்ட காரணமாக இருந்த ஊழியர்களை மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் கணேஷ் ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்.
Similar News
News December 5, 2025
மதுரை மாநகராட்சி ஊழியர் வலிப்பு ஏற்பட்டு பலி.!

மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த பிளம்பராக இருந்தவர் ராஜா 50. மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் பகுதி கழிவு நீர் கால்வாய் அருகே அவர் நடந்து சென்ற போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 5, 2025
மதுரை அருகே பெண் தற்கொலையில் சந்தேகம்…!

வெள்ளலூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி அன்னக்கிளி(35). முத்துக்குமார் துபாயில் வேலை பார்த்து வருவதால் தனது மகள் முத்துலட்சுமி(10), சிவா(7) மற்றும் மாமியாருடன் அன்னக்கிளி வாசித்து வந்தார். அவர் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்த கீழவளவு போலீசார், உயிரிழப்புகான காரணம் குறித்து இன்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
News December 5, 2025
JUSTIN திருப்பரங்குன்றம் வழக்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் விசாரணையை வரும் 10-ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்த நிலையில் வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க அரசு தரப்பு கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு 12-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும், விரும்புவர்கள் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் வெள்ளிக்கிழமைக்கு பிறகு புதிதாக வரும் மனுக்கள் ஏற்கப்படாது என்று இருநீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.


