News April 6, 2025
முன்னோர்கள் சாபம் தீர்க்கும் பூமிநாதர் கோயில்

திருச்சுழி பகுதியில் உள்ள பாண்டியர் காலத்துப் பூமிநாதர் கோயில், முன்னோர்களின் சாபம் தீர்க்கும் தலமாக நம்பப்படுகிறது. இதை மையப்படுத்தி திருச்சுழியை சுற்றி 8 இடங்களில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன. இங்குள்ள மூலவர் கல்யாண கோலத்தில் உள்ளதால் இங்கு வந்து வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இங்கு மோட்ச தீபம் ஏற்றினால் முன்னோர்கள் சாபம் நீங்கும் என்று நம்பப்படுகிறது. SHARE பண்ணுங்க.
Similar News
News November 26, 2025
விருதுநகர்: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News November 26, 2025
அருப்புக்கோட்டையில் அபராதம் விதித்த போலி அதிகாரி!

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் இனிப்பு கடையில் வேல்முருகன் (50) என்பவர் தன்னை உணவு பாதுகாப்பு அலுவலர் எனக் கூறி, உணவு தரம் சரியில்லை என ரூ.7025 அபராதம் விதித்து ஆன்லைன் மூலம் பெற்றுக் கொண்டார். விசாரித்ததில், அவர் மதுரை, கள்ளிக்குடியை சேர்ந்த லாரி டிரைவர் என தெரிந்தது. இவர் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தெரிவித்தார்.
News November 26, 2025
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் 13 லட்ச ரூபாய் காணிக்கை

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் வடபத்ரசயனா் சந்நிதி, நரசிம்மா் சந்நிதி உள்ளிட்ட 17 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தா்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. அறநிலையத் துறை உதவி ஆணையா் வளர்மதி தலைமையில் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில் 13 லட்சத்து 23 ஆயிரத்து 115 ரூபாய் 51 கிராம் தங்கம் உள்ளிட்டவை கிடைத்தது.


