News October 23, 2024
முன்னெச்சரிக்கையாக 48,664 மர கிளைகள் அகற்றம் – மாநகராட்சி

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஜூலை முதல் அக்டோபர் 19 வரை சென்னையில் 2,708 மரங்களின் 48,664 கிளைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News December 12, 2025
சென்னையில் சுகாதார மீறலுக்கு அபராதம் அதிகரிப்பு!

சென்னையில் GCC கடந்த ஒராண்டில் 79,875 டிஜிட்டல் அபராதங்கள் 40,227 பொது சுகாதார மீறல்களுக்காக விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் எரிப்பு, குப்பை கொட்டல், கழிவு பிரிப்பு தவறுதல் உள்ளிட்டவை அதிகம். கடைகள், கட்டுமானக் கழிவு கொட்டல், கொசு ஆதாரம், சட்டவிரோத வடிகால் இணைப்புகள் ஆகியவற்றிற்கு அபராதமாக மொத்தம் ரூ.9.27 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
சென்னையில் 12 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

சென்னை மாவட்டத்தில் உள்ள 40.04 லட்சம் வாக்காளர்களில், 70% பேர் மட்டுமே வாக்காளர் திருத்தப் படிவங்களை சமர்ப்பித்துள்ளனர். மீதமுள்ள 12 லட்சம் வாக்காளர்களிடமிருந்து விவரங்கள் பெறப்படாததால், அவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். படிவம் சமர்ப்பிக்க டிசம்பர் 14 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
சென்னை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

சென்னை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


