News October 23, 2024
முன்னெச்சரிக்கையாக 48,664 மர கிளைகள் அகற்றம் – மாநகராட்சி

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஜூலை முதல் அக்டோபர் 19 வரை சென்னையில் 2,708 மரங்களின் 48,664 கிளைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News December 14, 2025
சென்னை: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

சென்னை மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் இங்கே <
News December 14, 2025
BIG NEWS: சென்னையை குறிவைக்கும் பாஜக?

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 50 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம், சோளிங்கர், எழும்பூர், துறைமுகம், ஆயிரம் விளக்கு, குறிப்பாக முதல்வர் தொகுதியான கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பாஜகவிற்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என அடையாளம் கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்க கருத்து என்ன?
News December 14, 2025
சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட மூன்று முக்கிய நீர்த்தேக்கங்கள், 27 ஆண்டுகளுக்குப் பிறகு 100 சதவீதம் முழுமையாக நிரம்பியுள்ளன. இதன் காரணமாக, அடுத்த கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடைசியாக 1998-ஆம் இந்த மூன்று ஏரிகளும் முழுமையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது.


