News April 23, 2025
முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க கடன் பெற விண்ணப்பிக்கலாம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் முதலமைச்சர் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் இம்மாதம் 30 ஆம் தேதி அதற்கான கடைசி நாள் என்றும் அவர் கூறியுள்ளார். அவர்கள் தொழில் செய்ய 30 சதவீத மூலதன மானியமும் 3 சதவீத பட்டி மானியமும் இதன் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Similar News
News January 10, 2026
குமரி: கோயில் நகையை அபேஸ் செய்த EX.அறங்காவலர்

கடுக்கரை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (44). இவர் அப்பகுதியில் உள்ள தம்பரான் கோயில் – முத்தாரம்மன் கோயிலில் அறங்காவலராக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் சாமிகளுக்கான 45 பவுன் நகைகளில், 21 பவுன் நகைகளை திருடி அடகு வைத்த விவரம் தற்போது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தற்போதைய கோயில் அறங்காவலர் சேத்திரபாலன் போலீசில் அளித்த புகாரின் பேரில் அய்யப்பனை நேற்று (ஜன.9) போலீசார் கைது செய்தனர்.
News January 10, 2026
குமரி: இனி எல்லா CERTIFICATE-ம் உங்க WhatsAPP-ல்

குமரி மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இதில் தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும்.
News January 10, 2026
குமரி: 2 பெண்கள் கொலை… ரவுடி கைது..!

மருங்கூர் பகுதியை சேர்ந்தவர் அகிலாஸ் (37). கடந்த 2015-ல் லைசா என்ற பெண்ணை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அகிலாஸ் 2023-ல் ஒரு பெண்ணுடன் பழகி அவரையும் கொலை செய்தார். இந்த கொலை வழக்கிலும் ஜாமீனில் வந்த அகிலாஸ் 6 மாதங்களாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் நேற்று முன் தினம் செண்பகராமன்புதூரில் வைத்து அகிலாஸை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


