News May 17, 2024
முன்னாள் கவுன்சிலர் மகன் கைது!

தலைவாசல் அருகே புனல் வாசலை சேர்ந்தவர் துரைராஜ். இவர் நேற்று முன்தினம் அம்மம்பாளையத்தில் இருந்து, ஆத்தூருக்கு பைக்கில் வந்துள்ளார். அப்போது விநாயகபுரத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பெருமாள், அவரது மகன் அரவிந்த் ஆகியோர் பைக்கில் வந்து தகராறு செய்து, ஜாதி பெயரை கூறி தாக்கியுள்ளனர். துரைராஜ் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து நேற்று அரவிந்தை கைது செய்தனர். பெருமாளை தேடி வருகின்றனர்.
Similar News
News March 8, 2026
சேலம்: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 8, 2026
ஏற்காட்டில் தீவிர சோதனை!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால், சேலம் மாவட்ட வனப்பகுதிகளில் காட்டுத்தீயைத் தடுக்க வனத்துறை தீவிர முன்னெச்சரிக்கை எடுத்துள்ளது. ஏற்காடு அடிவாரம் சோதனைச் சாவடியில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தீவிரமாகச் சோதிக்கப்படுகின்றன. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்சேர்வராயன் மலை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
News March 8, 2026
தலைவாசல் அருகே பயங்கர விபத்து: குழந்தை பலி

பெரம்பலூர் சேர்ந்த அரவிந்த், திருமண நிகழ்வை முடித்துவிட்டு குடும்பத்துடன் காரில் ஊர் திரும்பியபோது,தலைவாசல் அருகே வீரகனூரில் தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் கவிழ்ந்து தம்பதி மற்றும் அவர்களது 4 வயது மகன் அமிழ்தமொழியன் படுகாயமடைந்தனர்.சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சிறுவன் நேற்று உயிரிழந்தான்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்


