News May 17, 2024
முன்னாள் கவுன்சிலர் மகன் கைது!

தலைவாசல் அருகே புனல் வாசலை சேர்ந்தவர் துரைராஜ். இவர் நேற்று முன்தினம் அம்மம்பாளையத்தில் இருந்து, ஆத்தூருக்கு பைக்கில் வந்துள்ளார். அப்போது விநாயகபுரத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பெருமாள், அவரது மகன் அரவிந்த் ஆகியோர் பைக்கில் வந்து தகராறு செய்து, ஜாதி பெயரை கூறி தாக்கியுள்ளனர். துரைராஜ் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து நேற்று அரவிந்தை கைது செய்தனர். பெருமாளை தேடி வருகின்றனர்.
Similar News
News December 15, 2025
சேலம் கொளத்தூரில் வெட்டி கொலை? பரபரப்பு

சேலம்: கொளத்தூர் அருகே உள்ள காவேரிபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நேற்று இரவு ரத்த காயங்களுடன் சடலம் ஒன்று கிடப்பதாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து போன நபர் கொளத்தூர் அருகே கருங்கலூர் பகுதியை சேர்ந்த முன்னால் ஐ.டி.ஊழியர் செல்வகுமார்(38) என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணை நடத்தினர் வருகின்றனர்.
News December 15, 2025
சேலம்: டிகிரி, டிப்ளமோ போதும்…அரசு வேலை!

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ -இல் முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட 764 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி, ஐடிஐ, டிப்ளமோ படித்திருந்தால் போதும். சம்பளம் வேலைக்கேற்ப ரூ.35,400 – ரூ.1,12,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள்<
News December 15, 2025
அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முஸ்லிம், கிறிஸ்தவர், புத்த மதத்தினர், பார்சி, சீக்கியர், சமணர், ஆகியோரின் உரிமைகள் பாதுகாக்க, அரசின் சிறுபான்மை நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வரும் 18ம் தேதி மதியம் 3-30 மணிக்கு, ஆம்பல் கூட்ட அரங்கில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


