News February 15, 2025

முன்னாள் எம்.பிக்கு புகழஞ்சலி செலுத்திய அமைச்சர்

image

திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட அவைத்தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான வேணுகோபால் அவர்களின் நினைவிடத்தை மாண்புமிகு பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை துறை சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் திறந்து வைத்து முதலாம் ஆண்டு புகழஞ்சலி செலுத்தினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News November 15, 2025

திருப்பத்தூர்: சம்பளம் வரலையா..? உடனே CALL!

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 15, 2025

ஆம்பூர்: வீட்டுக்குள் நுழைந்த பாம்பிற்கு வழிபாடு!

image

ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள்(67). வீட்டில் தனியாக வசித்து வரும் இவரின் வீட்டில் மூன்று நாட்களுக்கு முன்பு ஓர் நல்ல பாம்பு புகுந்தது. அதை விரட்ட முனியம்மாள் முயற்சித்தும் முடியாததால் வீட்டிலேயே முடங்கி வாழ்ந்துள்ளார். நேற்று(நவ.15) அக்கம் பக்கத்தினரிடம் அவ தகவல் தெரிவிக்க, தீயணைப்பு வீரர்கள் பாம்பை மீட்டனர். அப்போது, முனியம்மாள் கற்பூரம் ஏற்றி வணங்கி வழியனுப்பினார்.

News November 15, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (நவ.14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!