News August 26, 2024

முன்னாள் அமைச்சருக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு

image

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் வரை மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News November 21, 2025

விருதுநகர்: தேர்வு இல்லை.. வானிலை மையத்தில் வேலை ரெடி

image

விருதுநகர் மக்களே, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. சம்பளம்: ரூ.29,200 – ரு.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி : டிச. 14 ஆகும். டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News November 21, 2025

விருதுநகர்: தகாத உறவு.. போலீஸ் ஏட்டு ‘சஸ்பெண்ட்’

image

விருதுநகர் மாவட்டம், மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்த இளம்பெண்ணுடன், போலீஸ் ஏட்டு ஜெயபாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அக்., 30 இரவு, 11:30 மணிக்கு மேல், விருதுநகர் அருகே இளம் பெண்ணின் வீட்டில் தனிமையில் இருந்தனர். அப்போது, பெண்ணின் கணவர், உறவினர்கள் ஜெயபாண்டியை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடினார். இதையடுத்து ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

News November 21, 2025

சாத்தூர் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

image

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பைபாஸ் மேம்பாலத்தில் திருநெல்வேலி நோக்கி சென்று லாரி மீது திருமங்கலத்தில் இருந்து வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!