News May 17, 2024

முன்னறிவிப்பின்றி வீட்டை இடித்த அதிகாரிகள்

image

ஆலந்தூர் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் பஷீர்.‌ தனது வீட்டை புதுப்பித்து கட்டி வருகிறார். நேற்று இரவு வந்த அதிகாரிகள் இந்த இடம் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமானது இது குறித்து விளக்கம் அளிக்க நாளை அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும் எனக் கூறிச் சென்றனர். ஆனால் இன்று காலை எவ்வித முன்னறிவிப்புமின்றி வீட்டை ஜேசிபி மூலம் இடித்து விட்டனர். இதுகுறித்த புகாரில் பரங்கிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 13, 2025

சென்னையில் 5,970 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

image

சென்னையில், 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. சென்னை போன்ற குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை சென்னையில் 5,970 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக ரேபிஸ் தொற்றால் உயிரிழப்பு எதுவும் இல்லை. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்.

News August 13, 2025

சென்னையில் மின்தடை அறிவிப்பு!

image

இன்று (ஆகஸ்ட் 13) அடையாறு, காந்தி நகர், கொட்டிவாக்கம், காவேரி நகர், ECR சாலை, பாலவாக்கம், திருமுல்லைவாயல், கோணிமேடு, பெரம்பூர், நாளை (ஆகஸ்ட் 14) கீழ்பாக்கம், மேடவாக்கம், தரமணி, சர்தார்பட்டேல் சாலை, பள்ளிப்பேட்டை, செம்பரம்பாக்கம், நசரத்பேட்டை, வரதராஜபுரம், தாம்பரம், இரும்புலியூர், வேளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள்

News August 13, 2025

மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க இங்கு போங்க

image

சென்னையில் இன்று (ஆகஸ்ட்.13) தண்டையார்பேட்டை, மணலி, தேனாம்பேட்டை ஆகிய பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <>இந்த லிங்கை கிளிக் <<>>செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!