News April 16, 2024

முத்து மாரியம்மனுக்கு தங்க கவச அலங்காரம்

image

நாகப்பட்டினம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப் பொய்கை நல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மழை முத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார கிராமங்களை பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Similar News

News November 28, 2025

மழைநீர் சேகரிப்பு: நாகை கலெக்டர் அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்து நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே விழிப்புணர்வு பேரணி, நாளை (28.11.2025) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் கொடியசைத்து பேரணி துவக்கி வைக்க உள்ளார்.

News November 28, 2025

நாகை: விளையாட்டு வீரர்களுக்கு அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சி.மு. குமரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாகையில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் உடற்பயிற்சி கூடங்கள், பல்வேறு விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே இளைஞர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்ய (டிசம்பர் 4) கடைசி நாளாகும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் விரைந்து தங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்து, தங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!