News March 26, 2025

முத்துப்பேட்டை :போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு

image

முத்துப்பேட்டை கோபாலசமுத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் இறால் பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடத்த கிராம மக்கள் திரண்டு பேரணியாக வந்தபோது இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் தடுத்து நிறுத்தி விவசாய சங்க மாவட்ட தலைவர் முருகையனை தள்ளினார். இதனைக்கண்ட மக்கள் கூச்சலிட்டனர். இதனால் போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News October 30, 2025

திருவாரூர்: கிராம ஊராட்சிகளில் இதை மறக்காதிங்க!

image

திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில், உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு, வருகின்ற 01.11.2025 சனிக்கிழமை அன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் இதில் கிராம வளர்ச்சிகள் குறித்த பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

News October 30, 2025

திருவாரூர்: கொக்கு வேட்டை-வாலிபர் கைது!

image

முத்துப்பேட்டை வனவர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினர் மங்கனங்காடு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் பொழுது அப்பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(26) என்பவர் அவரது வீட்டில் 2 கொக்கு 2 மடையன் போன்ற பறவைகளை உயிருடன் வேட்டையாடி, விற்பனைக்காக கூண்டில் வைத்திருந்தது தெரியவந்தது அதன்படி விக்னேசை கைது செய்து விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் ரூபாய் 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News October 30, 2025

திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரங்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!