News August 11, 2024
முத்துப்பேட்டை அருகே கொலை தொடர்பாக 3பேர் கைது

முத்துப்பேட்டை தாலுகா நடுவக்களப்பால் கடைவீதியில் நேற்று(ஆக.,10) மாரிமுத்து என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய:து. இந்நிலையில் நேற்று இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கோபிநாத்(21), வீரமணி(23), பிரேமா(46) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் விசாத்திதல் சம்பந்தப்பட்டு இருப்பதாக அறிந்து மூவரையும் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 17, 2025
திருவாரூர்: விவசாய கூலித்தொழிலாளி தற்கொலை

முத்துப்பேட்டை, மேலநம்மங்குறிச்சியைச் சேர்ந்தவர் காசிநாதன் (50). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு சமீபகாலமாக தீராத வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த காசிநாதன் சம்பவத்தன்று வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அவரது மகன் அய்யாதுரை முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பந்திது, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 17, 2025
திருவாரூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <
News December 17, 2025
திருவாரூர்: நீரில் மூழ்கி மீனவர் பலி!

முத்துப்பேட்டை கற்பகநாதர்குளம் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ரவி(58). இவர் நேற்று வளவனாற்றின் கடல் முகத்துவாரம் அருகே வலைவிரித்து மீன் பிடித்துள்ளார். அப்போது, திடீரென்று நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற முத்துப்பேட்டை போலீசார் நீரில் மூழ்கி பலியான மீனவர் ரவியின் உடலை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


