News August 11, 2024
முத்துப்பேட்டை அருகே கொலை தொடர்பாக 3பேர் கைது

முத்துப்பேட்டை தாலுகா நடுவக்களப்பால் கடைவீதியில் நேற்று(ஆக.,10) மாரிமுத்து என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய:து. இந்நிலையில் நேற்று இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கோபிநாத்(21), வீரமணி(23), பிரேமா(46) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் விசாத்திதல் சம்பந்தப்பட்டு இருப்பதாக அறிந்து மூவரையும் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 23, 2026
திருவாரூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

திருவாரூர் மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News February 23, 2026
திருவாரூர்: வங்கியில் வேலை – கடைசி வாய்ப்பு!

அரசு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB) காலியாக உள்ள (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5138
3. சம்பளம்: ரூ.12,300 – 15,000
4. கல்வித் தகுதி: டிகிரி போதும்
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 23, 2026
திருவாரூர்: இளம் பெண்ணை கர்ப்பமாக்கியவர் கைது

வலங்கைமானை சேர்ந்த பரணிதரன் (22), இவர் 22 வயதான பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருந்த நிலையில், அந்த பெண் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பரணிதரனிடம் கூறியதும், பரணிதரன் பெண்ணை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நன்னிலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பரணிதரன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


