News March 19, 2024

முதியவர்களுக்கு எண் வெளியிட்ட நெல்லை காவல்துறை

image

நெல்லை மாநகர பகுதியில் வசிக்கும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தங்களது பிரச்சனைகள் குறித்து புகார் மனுக்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரடியாக சென்று கொடுக்க வேண்டியது இல்லை. மாறாக மாநகர காவல் கட்டுப்பாட்டு அலைபேசி எண் 9498181200 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தங்களது புகாரை தெரிவிக்கலாம் என மாநகர காவல் துறை இன்று (மார்ச் 19) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Similar News

News December 10, 2025

நெல்லையில் இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியை சேர்ந்த சேர்ந்த குத்தாலம் என்பவரின் மகன் பூர்ண ஆனந்த்(31) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறி நேற்று போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளை சிறையில் அடைத்தனர்.

News December 10, 2025

நெல்லை மக்கள் கவனத்திற்கு..!

image

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (டிச 10) நெல்லை மாநகராட்சியின் 55 வார்டுகளிலும் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெறும் என ஆணையர் மோணிகா ரானா நேற்று அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் அடிப்படை தேவைகள் குறித்தும் வார்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் மாமன்ற உறுப்பினர்களிடம் முறையிடலாம் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

News December 10, 2025

நெல்லையில் நாளை பகுதி சபா கூட்டம் அறிவிப்பு

image

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நாளை நெல்லை மாநகராட்சியின் 55 வார்டுகளிலும் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெறும் என ஆணையர் மோணிகா ரானா இன்று அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் அடிப்படை தேவைகள் குறித்தும் வார்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் மாமன்ற உறுப்பினர்களிடம் முறையிடலாம் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!