News April 26, 2025
முதியவரை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை

துரைப்பாண்டி(60), முத்துக்குமார்(60) இருவரும் கொரோனா காலத்தில் ராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலயத்தில் யாசகம் வாங்கி வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 2022ல், காசை பிரித்துக் கொள்வதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் துரைப்பாண்டி, பீர் பாட்டிலால் தாக்கியதில் முத்துக்குமார் உயிரிழந்தார். துரைப்பாண்டிக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
Similar News
News December 9, 2025
கீழக்கரை விபத்தில் மேலும் ஒருவர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலையம் பகுதியில் கடந்த டிச.06 அதிகாலை நடந்த சாலை விபத்தில் ஆந்திராவை சேர்ந்த நான்கு ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அதில் காயமடைந்த கீழக்கரை அலவாய்கரவாடியை சேர்ந்த மாதேஸ் என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
News December 9, 2025
ராமநாதபுரம்: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா?

ராமநாதபுரம் மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை. இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.
News December 9, 2025
ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 491 பேர் கைது

ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று யூனியன் அலுவலகம் முன்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர் .நீர்த்தேக்கத்தொட்டி சுத்தம் செய்வதற்கு கிளீனி ங் அலவனஸ் ரூ.300 வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய நிலையில் 191 பேரை போலீசார் கைது செய்தனர்.அதே போல் முதுகுளத்துாரில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்ட 300 பேரையும் கைது செய்தனர்.


