News January 1, 2025
முதல் பெண் போலீஸ் ஜீப் ஓட்டுநர்

சாத்தூர் அருகே கொம் மங்கியாபுரத்தைச் சேர்ந்தவர் முதல் பட்டதாரி ரேணுகா. 2 பெண் குழந்தைகளுக்கு தாயான இவர் தமிழ்நாடு காவல்துறையில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இக்கிராமத்தில் இருந்து முதல் பெண் காவலர் என்ற பெருமையுடன் விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் ஜீப் ஓட்டும் ஒரே பெண் டிரைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். நம்ம ஊர் பெண்ணுக்கு வாழ்த்துக்களை CONNENT இல் தெரிவிக்கலாம்.
Similar News
News December 22, 2025
சிவகாசி: பள்ளி மைதானத்திலே கஞ்சா விற்பனை!

சிவகாசி அருகே திருத்தங்கல் தனியார் பள்ளி மைதானத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உடனே அங்கு சென்ற போலீசார் கஞ்சா விற்ற கண்ணகி காலனியை சேர்ந்த பால்ராஜ்(20), தினேஷ்குமார் 26, வினோத்ராஜா 21, ஆகியோரை கைது செய்தனர். மேலும், அங்கிருந்து தப்பி ஓடிய சிவகாசி அய்யப்பன் காலனியை சேர்ந்த விக்னேஷ்வரன் (எ)விக்கி என்பவரை தேடி வருகின்றனர்.
News December 22, 2025
விருதுநகர்: BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை!

விருதுநகர் மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் இங்கு <
News December 22, 2025
விருதுநகர்: ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

வன்னியம்பட்டி அரசியார்பட்டியைச் சேர்ந்தவர் மாரிசங்கர்(24). மாரிசங்கருக்கும் அவரது தாத்தாவுக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் வீட்டில் மாரி சங்கர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஶ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


