News August 17, 2024
முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் சார்பில், ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள வல்லம் படுகால் பகுதியில் ரூ.706 கோடியில் பாக்ஸ்கான் நிறுவனத்திற்காக 18,720 படுக்கைகள் கொண்ட தொழிற்சாலை பணியாளர்கள் தங்குவதற்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 27, 2025
காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (26.12.2025) முதல் நாளை காலை (டிச.27) இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
News December 26, 2025
காஞ்சியில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…

காஞ்சிபுரத்தில் நாளை டிசம்பர் 27 மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நுறி வழிகாட்டு மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் காலை 9:00 மணி முதல் தொடங்கி நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்களுடன் நேரடியாக முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 044-27237124 அழைக்கலாம்.
News December 26, 2025
நாளை ஆசிரியர் வாரியம் மூலம் உதவி பேராசிரியர் தேர்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் அரசு கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியருக்கான தேர்வு 27.12.2025 சனிக்கிழமை நடைபெற உள்ளது. முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணி பிற்பகல் வரை மற்றும் பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணிவரை என இரு தேர்வுகளாக நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களில் மாற்றுத்திறனாளி தேர்வர்களாக 18 தேர்வர்கள் உட்பட 614 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.


