News July 15, 2024

முதல்வர் மௌனம் காக்க கூடாது: ஆர்.பி.உதயகுமார்

image

தமிழகத்திற்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர்கூட தர மறுக்கும் கர்நாடகா முதலமைச்சரை, தமிழக முதலமைச்சர் கண்டிக்காமல் மௌனம் விரதம் இருந்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு இனி மௌனவிரத இருக்க கூடாது என்றும், வாயால் வடை சுடாமல் முதலமைச்சர் வாயைத் திறக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Similar News

News July 11, 2025

மதுரை: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

image

➡️ மதுரை மாவட்டத்தில் நாளை 73,826 பேர் (ஜூலை.12) குரூப்-4 தேர்வு எழுதுகின்றனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 11, 2025

மதுரையில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

image

மதுரை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் வருகிற 12-ம் தேதி குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க, கார்டில் பெயர், முகவரி, போன் நம்பர், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். மக்களே, மிஸ் பண்ணிடாதீங்க SHARE பண்ணுங்க.

News July 11, 2025

பத்து சதவீதம் பாதிப்பு இருந்தாலும் பதிவு செய்து பயனடையலாம்

image

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் வீடுவீடாக மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. 10% பாதிப்பு இருந்தாலும் பதிவு செய்து கொள்வர்.தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க.உங்களால் ஒருவர் கண்டிப்பாக பயனடைவார்.

error: Content is protected !!