News December 5, 2024
முதல்வர் மருந்தகம்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (டிச.5) கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ள தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.
Similar News
News October 25, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு (அக்டோபர்-24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 24, 2025
செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்டம், காவல்துறையின் மழைக்கால எச்சரிக்கை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. மழைக்காலங்களில் அறுந்து அல்லது தொங்கி இருக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம். அதிகனமழை சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும் நேரத்தில் சாலையில் தேங்கி நிற்கும் பல்லங்களில் மின் கம்பிகள் அறுந்து விழும் அபாயம் உள்ளதால் மக்கள் கவனமாக இருக்கவும்.
News October 24, 2025
செங்கல்பட்டு: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<


