News August 27, 2024
முதல்வர் கோப்பை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்க செப்-2வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://sdat. tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 9,901 பேர். கல்லூரி மாணவர்கள் 10,378 பேர், மாற்றுத் திறனாளிகள் 438 பேர், அரசு பணியாளர்கள் 560 பேர். பொதுப்பிரிவினர் 878 பேர் என மொத்தம் 22,155 பேர் பதிவு செய்துள்ளனர்.
Similar News
News October 20, 2025
கோவையில் இங்கு பட்டாசு வெடிக்க மாட்டார்கள்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே கிட்டாம்பாளையம் கிராமத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகை வவ்வால் இனங்கள் உள்ளன. இதனை பாதுகாப்பதற்காக, கடந்த 26 ஆண்டுகளாக கிராம மக்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காமல் இருந்து வருகின்றனர். மேலும் இங்குள்ள ஆலமரம் மற்றும் புளிய மரங்களில் வசித்து வரும் வவ்வால்களை பாதுகாக்க சரணாலயம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.SHAREit
News October 20, 2025
சூலூர் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஷானு (47) என்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர், சூளூர் விமானப்படை தளத்தில் சில ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் பாதுகாப்பு கோபுரத்தில் பணியில் இருந்தபோது, ஷானு தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்துத் சூளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 20, 2025
கோவை: வங்கிச் சேவை இனி வாட்ஸ்அப்பில்!

உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற இனி வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை; கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணைச் சேமித்து, ‘Hi’ என்று வாட்ஸ்அப்பில் அனுப்பினால் போதும். தேவையான அனைத்து விவரங்களும் வாட்ஸ்அப்பிலேயே வந்துவிடும். SBI 90226 90226, கனரா வங்கி 90760 30001, இந்தியன் வங்கி (Indian Bank) 87544 24242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) 96777 11234, HDFC Bank 70700 22222 : இதனை மற்றவர்களும் ஷேர் பண்ணுங்க