News August 24, 2024
முதல்வர் கோப்பை போட்டி: கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாட்டில், நடப்பாண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி 5 பிரிவுகளில், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி, இதற்கான முன்பதிவு ஆகஸ்ட் 25ம் தேதி வரை இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
ஈரோடு: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

ஈரோடு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
ஈரோடு: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

ஈரோடு மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)!
News November 26, 2025
ஈரோடு: மின்தடை அறிவிப்பு! நாளை ரெடியா இருங்க

மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக அஞ்சூர், ராசாத்தாவலசு, வெள்ளகோவில், தாசவநாய்க்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின்நிலையத்தில் நாளை (நவ.27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நம்மகவுண்டம்பாளையம், அஞ்சூர், சிலுவம்பாளையம், சொரியம்பாளையம், மேட்டுப்பாளையம், தாசவநாயக்கன்பட்டி, வெள்ளகோவில், வெள்ளகோயில், அத்திபாளையம், வேப்பம்பாளையும், கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.


