News February 16, 2025
முதல்வரின் காக்கும் கரங்கள் கலெக்டர் தகவல்

முன்னாள் படைவீரர்களின் நலனுக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் வருகிற பிப்ரவரி 20-ம் தேதி மாலை 3 மணியளவில் முகாம் நடைபெறவுள்ளது. எனவே இதில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 29, 2025
வேலூர்: போக்குவரத்து துறை புகார் எண்கள்

பேருந்து தாமதாக வருதல், நிற்காமல் செல்லுதல், நடத்துநர், ஓட்டுநர் அநாகரிகமாக நடந்து கொண்டால் இந்த எண்களில் புகாரளியுங்கள். கட்டணமில்லா அழைப்பு – 1800 599 1500, மாநகர போக்குவரத்து கழகம் – 94450 30516, 044-23455858 – 859, அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 94450 14438, 044-25368323. பொது மேலாளர் – 9445021301, 0416-2252682, மாவட்ட மேலாளர் – 9445021303 ஆகிய எண்களை சேவ் பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க.
News December 29, 2025
கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.29) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News December 29, 2025
வேலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

வேலூரில் டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை டிசம்பர் 30-ம் தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் அரசு அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


