News May 16, 2024

முதலை கடித்து பராமரிப்பாளர் காயம்

image

வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி ஐந்து வருடங்களாக தற்காலிக பணி செய்பவர் விஜய் (23). மூன்று மாதங்களாக சதுப்புநீர் முதலை பண்ணையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டவரை இன்று முதலை ஒன்று கடித்தது. இதில் பலத்த காயமடைந்த விஜய் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஜயின் தந்தை ஏசு நெருப்பு கோழி பராமரிப்பில் நிரந்தர பணியாளராக வேலை பார்கிறார்.

Similar News

News December 8, 2025

செங்கல்பட்டு: ரீலிஸ் மோகத்தால் நடந்த பயங்கர விபத்து!

image

திருவள்ளுவரை சேர்ந்த சசி மற்றும் தனுஷ் இருவரும் விலை உயர்ந் ஹெல்மெட்டை அணிந்துகொண்டு கூடுவாஞ்சேரி அருகே வேகமாக செல்லும் போது ரீலிஸ் எடுத்துக்கொண்டே சென்றனர். அப்போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி மூவரும் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது, அவர்களுக்கு உதவ வந்த ஆட்டோ டிரைவர் மீதும் பைக் மோதி 5 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் விசாரணை துவங்கியது.

News December 8, 2025

செங்கல்பட்டு: நூதன முறையில் லட்சக்கணக்கில் மோசடி!

image

மடிப்பாக்கத்தைச் சேர்ந்த உணவக மேலாளர் சங்கர், தவான் என்பவரிடம் ரூ.7 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார். சுங்க இலாகா அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், ஐ-போன் மற்றும் லேப்டாப் போன்ற விலை உயர்ந்த பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கித் தருவதாகவும் கூறி தவான் பணத்தைப் பெற்றுள்ளார். ஆனால், பொருட்கள் ஏதும் தராமல் ஏமாற்றியுள்ளார். சங்கரின் புகாரின் பேரில், மோசடி செய்த தவான் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.

News December 8, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (டிசம்பர்- 07) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!