News May 16, 2024
முதலை கடித்து பராமரிப்பாளர் காயம்

வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி ஐந்து வருடங்களாக தற்காலிக பணி செய்பவர் விஜய் (23). மூன்று மாதங்களாக சதுப்புநீர் முதலை பண்ணையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டவரை இன்று முதலை ஒன்று கடித்தது. இதில் பலத்த காயமடைந்த விஜய் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஜயின் தந்தை ஏசு நெருப்பு கோழி பராமரிப்பில் நிரந்தர பணியாளராக வேலை பார்கிறார்.
Similar News
News December 28, 2025
செங்கை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 28, 2025
தாம்பரம் சிறப்பு ரயில்கள் இயக்கம்

தாம்பரம்-ராமேஸ்வரம் மற்றும் கோவை-ராமேஸ்வரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. தாம்பரத்தில் இருந்து நாளை (29 ஆம் தேதி) இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். மறுமார்க்கமாக, ராமேசுவரத்தில் இருந்து 30ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
News December 28, 2025
செங்கை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

செங்கல்பட்டு மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT


