News March 28, 2025
முதலிடத்தை தவறவிட்ட சிவகாசி

சிவகாசி மாநகராட்சியில் சொத்துவரி, வணிகவரி உள்ளிட்ட வரி இனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ. 25 கோடிக்கு வரி வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டில் நேற்று வரை 96.5 சதவீதம் கூட வர முடியாத நிலையில் மாநகராட்சி நிர்வாகம் நிர்வாக ரீதியான பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. கடந்த வரி வசூலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த சிவகாசி மாநகராட்சி, தற்போது 23வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
விருதுநகரில் நாளை பட்டா மாற்றம் செய்யலாம்

விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் வருவாய் துறை இணைந்து நாளை(ஜூலை.9) காலை 10 மணிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் முன்னோர்களின் பெயரில் உள்ள பட்டா மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் இதில் கலந்து பாட்டாக்களை தங்கள் பெயரில் மாற்றிக்கொள்ளலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News July 7, 2025
ஸ்ரீவி அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பணி புரிந்து வரும் ரமேஷ் பாபு என்ற மருத்துவரை அவரது தனியார் மருத்துவமனை முன்பு கத்தியால் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் ரமேஷ் பாபு காயமடைந்தார். உடனடியாக ரமேஷ் பாபுவை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News July 7, 2025
ராஜபாளையம்: பரியாணி கடை வைக்க ரூ.25 கோடி மோசடி

ராஜபாளையம் தென்றல் நகரை சேர்ந்த கங்காதரன் என்பவர் 2 வருடங்களுக்கு முன்பு பிரபல மரக்கார் பிரியாணி கடை நடத்தி வருவதாகவும், அதற்கு கிளை திறக்க உள்ளதாக கவர்ச்சியாக விளம்பரம் செய்துள்ளார். இதை பார்த்து தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பண்டிச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களைச் சேர்ந்த 239 பேரிடம் ரூ.25 கோடி வரை மோசடி செய்தார். இதில் கங்காதரனை இன்று விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.