News October 24, 2024

முதலமைச்சர் விருதுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பாக ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நவம்பர் 11ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்தார்.

Similar News

News November 20, 2025

செங்கோட்டை விரைவு ரயில்: வழித்தடங்களில் மாற்றம்

image

திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 20, 21, 22, 23, 24, 25 ஆம் தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

News November 20, 2025

தென்காசி: போக்சோ கைதி சிறையில் தற்கொலை

image

தென்காசி மாவட்டம் ஆயக்குடியைச் சேர்ந்தவர் திருமலை குமார் (39). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் நேற்று அவர் சிறை குளியல் அறையில் தான் அணிந்திருந்த விலங்கில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருமாள்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 20, 2025

தென்காசி: SIR உதவி எண்கள் வெளியீடு

image

SIR படிவம் பூர்த்தி செய்வது குறித்து சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் – 04633 210074, 04633-1950, தென்காசி சட்டமன்றத் தொகுதி -04633-222212, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி-04633-245666, ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி 04633-270899, 9944096957, சங்கரன்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி 04636223030, வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்றத் தொகுதி-04636-250223 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கலாம்.

error: Content is protected !!